பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பொதுவாக விஜய், அஜித் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனாலே ரசிகர்களுக்கிடையே போட்டிகள் நிலவும் . திரையரங்குகளில் ரசிகர்களுக்கிடையே மோதல்களும் ஏற்படும். இந்நிலையில் 1995-ல் விஜய், அஜித் இருவரும் இணைந்து நடித்து வெளியான 'ராஜாவின் பார்வையிலே' திரைப்படம் வருகின்ற வரும் ஜனவரி 6-ம் தேதி ரீ-ரிலீஸாகிறது. சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள ஏஜிஎஸ் திரை அரங்கில் ராஜாவின் பார்வையிலே திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு விஜய் நடித்த வாரிசு படமும் , அஜித் நடித்துள்ள துணிவு படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது .விஜய், அஜித்தின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்து ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.