லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அஜித் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கிய எச்.வினோத் அடுத்தபடியாக கமல்ஹாசனுக்கும் ஒரு கதை சொல்லியிருக்கிறார். இந்த நிலையில் துணிவு படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை தான் இருக்க இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார் வினோத். அவர் கூறுகையில், என்னுடைய அடுத்த படம் ஒரு காவல்துறை அதிகாரி சந்தித்த பிரச்சினைகளை மையமாகக் கொண்ட உண்மை கதையில் உருவாகிறது. இந்த படத்தில் தனுஷ் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க போகிறார் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் நிலையில், தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் எச்.வினோத் இயக்கும் படத்தில் அவர் நடிப்பார் என்று தெரிகிறது.