லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கே ஜி எப்-1 மற்றும் கே ஜி எப்- 2 ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதன் காரணமாகவே கே ஜி எப் -3 படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது அது குறித்து அப் படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரங்கடூர் ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார். அதில், கே ஜி எப் -3 படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை பிரசாந்த் நீல் ஏற்கனவே தயார் செய்து விட்டார். அந்த கதையில் யஷின் இளமைக்காலம் மற்றும் பிளாஷ்பேக் காட்சிகள் இடம்பெறும். தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல், அந்த படத்தை முடித்ததும் கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான பணிகளை தொடங்க இருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.