ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை |

ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறவர் உர்பி ஜாவத். சந்திர நந்தினி, மெரி துர்கா, ஜில் மா, தாயன், ஹே மேரா ஹம்ஸ்டார் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். புட்ச் பீட் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.
உர்பி ஜாவத் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கிறவர். படு கவர்ச்சியான படங்களை வெளியிடுவதால் லட்சக்கணக்கானவர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் பின் தொடர்கிறார்கள். அதோடு சமீபகாலமாக பொது இடங்களிலும், நிகழ்ச்சிகளிலும் படு ஆபாசமாக ஆடை அணிந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் மீது மும்பை அந்தேரியை சேர்ந்த வழக்கறிஞர் அலி காஷிப்கான் தேஷ்முக் என்பவர் அந்தேரி காவல் நிலையத்தில் உர்பி ஜாவத் மீது புகார் கொடுத்துள்ளார். “பொது வெளியிலும் சமூக ஊடகங்களிலும் ஆபாசத்தை பரப்பி வருகிறார். இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார். எனவே அவர் மீது சட்ட நடிவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தனது புகார் மனுவில் கூறியிருக்கிறார். மனு மீது போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.