ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
விஜய் நடித்துள்ள வாரிசு படம் வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு வரும் நிலையில் தற்போது பெரிய அளவில் அப்படக்குழு பிரமோசன்களை முடுக்கி விட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் விஜய். அப்போது அவர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்றைய தினம் இரண்டாம் கட்டமாக மீண்டும் பனையூர் அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்துள்ளார் விஜய். இந்த சந்திப்பில் வாரிசு படத்தை வெளிமாவட்டங்களில் மக்களிடம் கொண்டு சேர்க்க என்னென்ன விளம்பர யுக்திகளை செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும் முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்புக்கு பின் வழக்கம்போல் பிரியாணி விருந்தும் தடபுடலாக நடந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டதால் இப்படி அடுத்தடுத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளை விஜய் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. முக்கியமாக அடையாள அட்டையுள்ள விஜய் ரசிகர் மன்றத்தினரே இந்த சந்திப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.