பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வந்தார் சூர்யா. ஆனால் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கதையில் தனக்கு போதுமான திருப்தி இல்லாததால் இப்போது அந்த படத்தில் இருந்து அவர் விலகி இருக்கிறார்.
இந்த நிலையில் வணங்கான் படத்திற்கு கொடுத்திருந்த அதே கால்ஷீட் தற்போது இயக்குனர் ஹரிக்கு கொடுத்திருக்கிறார் சூர்யா. அவர்கள் மீண்டும் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் ஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்று பாகங்களில் நடித்துள்ள சூர்யா, அதன்பிறகு அருவா என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. பின்னர் அந்த படம் டிராப் ஆன நிலையில் தற்போது மீண்டும் அந்த படத்தில் நடிக்க கால்சீட் கொடுத்திருக்கிறாராம் சூர்யா. இதன் காரணமாக அருவா படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
அதோடு சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கும் அருவா படத்தின் நாயகியாக முதலில் ராசி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பூஜா ஹெக்டே இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் அருவா படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளது.