கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. அவருக்கு தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி அவரையும் 'நந்தா' படத்தின் மூலம் திறமையான நடிகராக மாற்றியவர் இயக்குனர் பாலா. 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்ட 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டார். நடிப்பதாக அறிவித்து பின்னர் சூர்யா விலகிய மூன்றாவது படம் இது.
இதற்கு முன்பு அவருக்கு கமர்ஷியல் அடையாளத்தை 'காக்க காக்க' படத்தின் மூலம் ஏற்படுத்தித் தந்த கவுதம் மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடிப்பதாக அறிவித்து பின் விலகினார். அதற்குப் பிறகு 'சிங்கம்' படத்தின் மூலம் மிகப் பெரும் வசூலை சூர்யாவுக்கு ஏற்படுத்தித் தந்த ஹரி இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட 'அருவா' படத்திலிருந்தும் விலகினார். இப்போது 'வணங்கான்' படத்திலிருந்தும் விலகியுள்ளார்.
சூர்யா நடிக்க கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படமும், ஹரி இயக்கத்திலும் சூர்யா நடிக்க மற்றொரு படமும் எதிர்காலத்தில் நடக்க வாய்ப்புள்ளது. அதற்கான பேச்சு வார்த்தைகள் ஏற்கெனவே முடிந்துள்ளதாகச் சொல்கிறார்கள். அது போல பாலா இயக்கத்தில் இனி சூர்யா நடிப்பாரா என்பதை பாலா மட்டுமே முடிவு செய்வார் என்று சொல்கிறார்கள்.