மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழ் சினிமாவில் ஆர்.கே .செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா. அதன் பிறகு தமிழ் ,தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்த ரோஜா தற்போது ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக அங்கம் வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடிய ரோஜா, திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது மீடியாக்களை சந்தித்த அவரிடம், அவரது மகள் அஞ்சு மாலிகாவின் சினிமா அறிமுகம் குறித்து மீடியாக்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது என்னுடைய மகள் சினிமாவில் நடிகையாக அறிமுகமானால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். அவளை ஊக்கப்படுத்துவேன். ஆனபோதிலும் எனது மகளுக்கு சினிமாவில் நடிகையாவதை விட விஞ்ஞானியாக வேண்டும் என்ற ஆசைதான் அதிகமாக உள்ளது. அதனால் என்னுடைய மகள் சினிமாவில் நடிகை ஆவதற்கு வாய்ப்பில்லை என்று தெளிவுபடுத்தி இருக்கிறார் ரோஜா.
இதன்மூலம் தனது மகள் சினிமாவில் அறிமுகமாகப்போவதாக கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் வட்டமடித்து வந்த செய்திகளுக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரோஜா.