மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஹிந்தி சினிமாவில் 1983ம் ஆண்டு பெயிண்டர் பாபு என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி சேஷாத்திரி. தொடர்ந்து ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், 1989ம் ஆண்டு கே.பாக்யராஜ் நாயகனாக நடித்த என் ரத்தத்தின் ரத்தமே என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பிரபு நடித்த டூயட் படத்தில் நாயகியாக நடித்தார். 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட மீனாட்சி சேஷாத்திரிக்கு தற்போது 59 வயதாகிறது.
இந்நிலையில் மீண்டும் நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். விரைவில் பாலிவுட் சினிமாவில் அவரை எதிர்பார்க்கலாம். அதோடு டோலிவுட், கோலிவுட்டிலும் தன்னுடைய வயதுக்கேற்ற முக்கியத்துவம் வாய்ந்த அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளாராம்.