வரிசையாக சரியும் வசூல் நிலவரம் : கூட்டுக்குழு அமைக்கப்படுமா? கூடி பேசுவார்களா? | ஆளே மாறிய அயோத்தி ப்ரீத்தி அஸ்ராணி | ஹீரோயின் இல்லை, அர்த்தமுள்ள கேரக்டரில் பிந்துமாதவி | சென்ட் பிசினஸில் இறங்கிய ராஷ்மிகா மந்தனா | கூலி: அமெரிக்கா டிக்கெட் முன்பதிவு ஆரம்பம் | குடும்பப் படங்களுக்கான வரவேற்பு: மீண்டும் நிரூபிக்குமா இந்த வாரப் படங்கள் | சூர்யாவுக்கு 50, தனுஷிற்கு 42 : சுடச்சுட வெளியாகும் புது அறிவிப்புகள் | 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' - பின்னணி இசை தாமதம்? | மாரீசன் படத்தை பேசாத வடிவேலு, பஹத் | “ஹிந்தி திரிஷ்யம் 3 தயாரிப்பு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுத்தனர்” : ஜீத்து ஜோசப் |
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வந்த படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்த நிலையில், ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார் சமந்தா. இந்த பாடலின் மிகப்பெரிய வெற்றி சமந்தாவின் மார்க்கெட்டில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது புஷ்பா- 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகா மந்தனாவே நாயகியாக நடிக்கும் நிலையில், முதல் பாகத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடிய சமந்தாவை மீண்டும் அணுகியபோது அவர் மறுத்து விட்டார். இதையடுத்து புஷ்பா -2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட தற்போது காஜல் அகர்வாலை அணுகி படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.