ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வந்த படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்த நிலையில், ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார் சமந்தா. இந்த பாடலின் மிகப்பெரிய வெற்றி சமந்தாவின் மார்க்கெட்டில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது புஷ்பா- 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகா மந்தனாவே நாயகியாக நடிக்கும் நிலையில், முதல் பாகத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடிய சமந்தாவை மீண்டும் அணுகியபோது அவர் மறுத்து விட்டார். இதையடுத்து புஷ்பா -2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட தற்போது காஜல் அகர்வாலை அணுகி படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.