பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
இந்தியாவில் ஜிஎஸ்டி என்ற வரி அமலுக்கு வந்ததை அடுத்து திரைப்படங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதை போல் 10% டிடிஎஸ் தொகை வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஜிஎஸ்டி வரி மற்றும் டிடிஎஸ் தொகையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் டி.சிவா, லலித் குமார், நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலரும் டில்லி சென்று தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார்கள். அதில், திரைப்படங்களின் வியாபாரங்களுக்கு வசூலிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும், பத்து சதவீதம் வசூலிக்கப்படும் டிடிஎஸ் தொகையை இரண்டு சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.