ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
சிம்பு நடித்த ‛ஈஸ்வரன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நித்தி அகர்வால். தொடர்ந்து ஜெயம் ரவி உடன் பூமி படத்தில் நடித்தார். தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஜோடியாக கலகத் தலைவன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். நவ., 18ல் இந்த படம் திரைக்கு வருகிறது.
நித்தி அகர்வால் தினமலருக்கு அளித்த பேட்டியில் சர்ச்சைகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‛‛என்னைப்பற்றி சர்ச்சையான செய்திகள் வந்தால் இரண்டு பேரிடம் மட்டும் தான் நான் தெளிவுப்படுத்த வேண்டும். அது எனது அப்பா, அம்மா மட்டுமே. அதற்குமேல் அதை பெரிதாக எடுக்க மாட்டேன். ஆரம்பத்தில் இதுபோன்ற சர்ச்சையான செய்திகள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, பின்னர் அது பழகிவிட்டது'' என்கிறார்.