இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கு நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா(79), உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் காலமானார். மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் இன்று(நவ., 15) பிரிந்தது.
தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் கிருஷ்ணா. ஏராளமான வெற்றி படங்களில் நடித்த இவர் படங்கள் தயாரித்தும், இயக்கியும் உள்ளார். இவரது மகனான கிருஷ்ணா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். வயது மூப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில் திடீரென நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுதிணறல் ஏற்பட்டு இன்று(நவ.,15) காலை அவரது உயிர் பிரிந்தது.
தெலுங்கு சினிமாவில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் விக்ரம் நடித்த கந்தசாமி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.