2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

பீஸ்ட், ஆச்சார்யா படங்களைத் தொடர்ந்து தற்போது ஹிந்தி, தெலுங்கில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. ஹிந்தியில் சல்மான்கான் உடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது பூஜா ஹெக்டே காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் தனது காலில் அணிந்திருந்த ஸ்பிலின்டை நீக்கிவிட்டு சோபாவில் அமர்ந்தபடி ஒரு வாளியில் வைக்கப்பட்ட தண்ணீரில் தனது காலை வைத்தபடி தான் சோபாவில் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் பூஜாஹெக்டே. அதோடு இந்த விபத்துக்கு பிறகு தினமும் என்னுடைய காலை இப்படித்தான் விடிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பூஜா ஹெக்டேவுக்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக சல்மான்கான் உடன் நடித்து வரும் கிசிக்கா பாய் கிசிக்கா ஜான் மற்றும் தெலுங்கில் திரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பை பூஜா ஹெக்டே அல்லாத மற்ற நடிகர் நடிகைகளை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.