புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
தமிழ் சினிமாவில் பல படங்களில் கதாநாயகனாக நடித்தும், சில படங்களை இயக்கியும் உள்ள அர்ஜுன், அவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜுனை தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த சில மாதங்களுக்கு முன்பு புதிய படம் ஒன்றிற்கு பூஜை போட்டார். அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க 'ஹிட்' படத்தின் கதாநாயகன் விஷ்வக் சென் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
கேரளாவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க அர்ஜுன் உள்ளிட்ட படக்குழு தயாராக இருந்த போது அப்படப்பிடிப்பில் விஷ்வக் சென் கலந்து கொள்ளவில்லை. அது குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அர்ஜுன், விஷ்வக் சென் மீது குற்றம் சாட்டியிருந்தார். ஈடுபாடு இல்லாமல், தொழில் ரீதியாக நேர்மையாக இல்லாமல் இருக்கிறார் விஷ்வக் சென் என்பது அர்ஜுனின் குற்றச்சாட்டு.
நேற்று நடைபெற்ற 'ராஜயோகம்' என்ற தெலுங்குப் பட விழாவில் அது குறித்து விஷ்வக் சென் பதிலளித்தார். “படத்தின் முதல் பாதிக்கான ஸ்கிரிப்ட் படப்பிடிப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்பே எனக்கு வந்தது. எனக்கான ஒரு இடத்தையும், சுதந்திரத்தையும், ஆலோசனைகளை ஏற்பதையும் மறுத்தார் அர்ஜுன். என்ன சொன்னாலும் என்னை சமாதானப்படுத்துவதிலேயே இருந்தார். படப்பிடிப்புக்குச் சென்றால் அது எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று செல்லவில்லை.
நான் படத்திலிருந்து விலகிவிட்டேன் என்று அர்த்தமில்லை. ஆனால், அர்ஜுன் சில விஷயங்களை விவாதிக்க வேண்டும். அது குறித்து அவரது குழுவிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. அதே சமயம் எனக்குத் தந்த சம்பளத்தைத் திருப்பிக் கேட்டார்கள். இது குறித்து நான் அமைதியாக இருக்கலாம் என்றுதான் இருந்தேன். இருப்பினும் என்னைப் பற்றி சர்ச்சை வந்ததால் இது குறித்து பேச வேண்டியதாகிவிட்டது. எனக்கு அர்ஜுனை அவமானப்படுத்தும் எண்ணமில்லை, படத்தின் தரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றே சொன்னேன்,” எனப் பேசியுள்ளார்.