புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
கமல் நடித்து வரும் இந்தியன்-2 மற்றும் ராம்சரண் நடிக்கும் ஆர்சி -15 ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார் ஷங்கர். இந்த படங்களை தொடர்ந்து பார்லிமென்ட் எம்பி சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி என்ற சரித்திர நாவலை தழுவி தனது புதிய படத்தை எடுக்க உள்ளார். சுமார் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக ஷங்கர் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த படம் குறித்து விருமன் படத்தின் ஆடியோ விழாவில் பேசிய சூர்யா, எழுத்தாளர் சு. வெங்கடேசனுடன் தான் ஒரு பெரிய வேலையில் இருப்பதாக தெரிவித்திருந்தார். இது ஷங்கரும் அவரும் இணையப் போவதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அளித்த ஒரு பேட்டியில், 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் வேள்பாரி படத்தின் பிரீ புரொடக்சன் பணிகளை இயக்குனர் ஷங்கர் தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு வேள்பாரி படம் மூன்று பாகங்களாக 1000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்து இருக்கிறார்.
அதனால் இந்தியன்- 2 மற்றும் ராம்சரண் நடிக்கும் படங்களின் மொத்த படப்பிடிப்பையும் இந்த ஆண்டுக்குள் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு சூர்யா நடிக்கும் வேள்பாரி படவேலைகளை ஷங்கர் தொடங்குவார் என்பது உறுதியாகி இருக்கிறது. அதோடு இப்படத்தில் கன்னட நடிகரான கேஜிஎப் யஷ் சூர்யாவுடன் இணைந்து நடிப்பதாகவும் கூறப்படுகிறது.