மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சமீபகாலமாக கன்னடத்தில் வெளியாகும் படங்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் கன்னடத்தில் கடந்த 20 வருடங்களில் 19 படங்களை இயக்கிய இயக்குனர் தயாள் பத்மநாபன் தனது 20வது படத்தை தமிழில் இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார். கன்னடத்திலேயே படங்களை இயக்கி வந்தாலும் இவர் தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் பிறந்தவர். கொன்றால் பாவம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் வரலட்சுமி கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் சந்தோஷ் பிரதாப் நடிக்கிறார்.
இது 2018ல் தயாள் பத்மநாபன் கன்னடத்தில் இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'ஆ காராள ராத்திரி' என்கிற படத்தின் ரீமேக்காக உருவாக இருக்கிறது. திரில்லராக உருவாகி இருந்த இந்த படத்தின் கதை இப்போதும் சொல்லக்கூடிய, தமிழுக்கும் பொருந்தக்கூடிய அம்சங்களைக் கொண்டதாக இருப்பதால் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்ததாக கூறுகிறார் தயாள் பத்மநாபன். அதேசமயம் தமிழுக்காக சில மாற்றங்களை மட்டும் செய்துள்ளதுடன் கன்னடத்தில் பெற்ற அதே வெற்றியை இங்கேயும் இந்த படம் பெற்றுத் தரும் என நம்புகிறார்.