இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சமீபகாலமாக கன்னடத்தில் வெளியாகும் படங்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் கன்னடத்தில் கடந்த 20 வருடங்களில் 19 படங்களை இயக்கிய இயக்குனர் தயாள் பத்மநாபன் தனது 20வது படத்தை தமிழில் இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார். கன்னடத்திலேயே படங்களை இயக்கி வந்தாலும் இவர் தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் பிறந்தவர். கொன்றால் பாவம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் வரலட்சுமி கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் சந்தோஷ் பிரதாப் நடிக்கிறார்.
இது 2018ல் தயாள் பத்மநாபன் கன்னடத்தில் இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'ஆ காராள ராத்திரி' என்கிற படத்தின் ரீமேக்காக உருவாக இருக்கிறது. திரில்லராக உருவாகி இருந்த இந்த படத்தின் கதை இப்போதும் சொல்லக்கூடிய, தமிழுக்கும் பொருந்தக்கூடிய அம்சங்களைக் கொண்டதாக இருப்பதால் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்ததாக கூறுகிறார் தயாள் பத்மநாபன். அதேசமயம் தமிழுக்காக சில மாற்றங்களை மட்டும் செய்துள்ளதுடன் கன்னடத்தில் பெற்ற அதே வெற்றியை இங்கேயும் இந்த படம் பெற்றுத் தரும் என நம்புகிறார்.