புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
சமந்தா நடிப்பில் அடுத்து வெளிவரும் படம் யசோதா. தெலுங்கில் தயாராகி உள்ள இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது. சிவலெங்கா கிருஷ்ணா தயாரித்துள்ள இந்த படத்தை ஹரி, ஹரிஷ் இரட்டையர்கள் இயக்கி உள்ளனர். மணிசர்மா இசை அமைத்துள்ளார், எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதன் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, தமிழில் சூர்யா, கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஹிந்தியில் வருண் தவான் வெளியிட்டனர்.
இந்த டீசரில் யசோதா வாடகை தாய் மோசடி தொடர்பான கதை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏழை வீட்டு பெண்ணான சமந்தா ஒரு கோடீஸ்வர பெண்ணுக்கு வாடகை தாயாக இருந்து குழந்தை பெற்று கொடுக்கிறார். இது தொடர்பாக வாடகை தாய் குழந்தை பெற ஏற்பாடு செய்த ஆஸ்பத்திரி நிர்வாகம் மோசடி செய்து விட அதை எதிர்த்து இன்னொரு சமந்தா போராடுகிற மாதிரியான கதை என்று தெரிகிறது. வாடகை தாயாகவும், அந்த தாய்க்கு பிறந்த குழந்தையாகவும் சமந்தா நடித்திருப்பதை யூகிக்க முடிகிறது. மருத்துவமனையின் உரிமையாளராக வரலட்சுமி சரத்குமார் நெட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பதம் தெரிகிறது.
நயன்தாரா வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்று பரபரப்பு ஓய்ந்திருக்கும் இந்த நேரத்தில் இந்த டீசர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.