லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
இயக்குனர் வெற்றிமாறன், லாக்கப் நாவலை ‛விசாரணை' என்ற பெயரிலும், பூமணி எழுதிய வெக்கை நாவலை ‛அசுரன்' என்ற பெயரிலும் திரைப்படமாக எடுத்துள்ளார். தற்போது விடுதலை படத்தை இயக்கி வரும் அவர், அடுத்ததாக, சி.சு.செல்லப்பா எழுதிய ‛வாடிவாசல்' நாவலை அதே பெயரில் இயக்க உள்ளார். இப்படத்தை தாணு தயாரிக்கிறார், ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.
ஜல்லிக்கட்டை மையப்படுத்திய இக்கதையில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ஜல்லிக்கட்டை மையப்படுத்திய ‛பேட்டைக்காளி' வெப் தொடரை தயாரித்துள்ள வெற்றிமாறன், வாடிவாசல் படத்தையும் அதே போன்ற கதையை தான் இயக்க உள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து விளக்கமளித்த வெற்றிமாறன், ‛பேட்டைக்காளி இன்னைக்கு நடக்குற விஷயம். வாடிவாசல் படம் 1960-ம் ஆண்டு நடக்கும் கதை' எனத் தெரிவித்துள்ளார்.