மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
இயக்குனர் வெற்றிமாறன், லாக்கப் நாவலை ‛விசாரணை' என்ற பெயரிலும், பூமணி எழுதிய வெக்கை நாவலை ‛அசுரன்' என்ற பெயரிலும் திரைப்படமாக எடுத்துள்ளார். தற்போது விடுதலை படத்தை இயக்கி வரும் அவர், அடுத்ததாக, சி.சு.செல்லப்பா எழுதிய ‛வாடிவாசல்' நாவலை அதே பெயரில் இயக்க உள்ளார். இப்படத்தை தாணு தயாரிக்கிறார், ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.
ஜல்லிக்கட்டை மையப்படுத்திய இக்கதையில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ஜல்லிக்கட்டை மையப்படுத்திய ‛பேட்டைக்காளி' வெப் தொடரை தயாரித்துள்ள வெற்றிமாறன், வாடிவாசல் படத்தையும் அதே போன்ற கதையை தான் இயக்க உள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து விளக்கமளித்த வெற்றிமாறன், ‛பேட்டைக்காளி இன்னைக்கு நடக்குற விஷயம். வாடிவாசல் படம் 1960-ம் ஆண்டு நடக்கும் கதை' எனத் தெரிவித்துள்ளார்.