புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் வெண்ணிலா கபடி குழு ஆகிய படங்களின் மூலம் திறமையான குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை தேடிக்கொண்டவர் நடிகர் கிஷோர் அதன்பிறகு ஹரிதாஸ், போர்க்களம் உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாகவும் எதார்த்தமான நடிப்பை வழங்கிய கிஷோர், சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஒற்றனாக (ஆபத்துதவியாக) வித்தியாசமான தோற்றத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
அதேசமயம் கன்னடத்திலும் இவர் நடித்துள்ள கந்தரா என்கிற படம் அதேநாளில் வெளியாகி வரவேற்பை பெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார் கிஷோர். இந்த நிலையில் முதன்முறையாக பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்துள்ள கிஷோர், சந்திரசேகர் பண்டியப்பா என்பவர் இயக்கும் ரெட் காலர் என்கிற சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கிஷோர் நடிக்கும் காட்சிகள் லக்னோவில் படமாக்கப்பட இருக்கின்றன.