சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
தமிழ் சினிமாவின் பெருமையாக இன்று வெளிவந்திருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் அமைந்துள்ளதாக காலைக் காட்சிகளைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் சில தெலுங்கு ஊடகங்களும், சில தெலுங்கு ரசிகர்களும் 'பொன்னியின் செல்வன்' படம் பற்றி சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ்வான கமெண்ட்டுகளைப் பரப்பி வருகின்றனர்.
ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' படத்துடன் 'பொன்னியின் செல்வன்' படத்தை ஒப்பிட்டுப் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 'பாகுபலி' படம் ஒரு கற்பனைக் கதை, அதை படமாக்குவதற்கு வசதியாக, எளிதாக எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் படமெடுக்கலாம். ஆனால், 'பொன்னியின் செல்வன்' படத்தின் கதை 70 வருடங்களுக்கு முன்பு கல்கி எழுத்தில் கற்பனையும், உண்மையும் கலந்து எழுதப்பட்ட வரலாற்றுக் கதை. அதை சினிமாவுக்காக எப்படி வேண்டுமானாலும் மாற்றி படமாக்க முடியாது. அந்த வித்தியாசம் கூடத் தெரியாமல் சில தெலுங்கு ரசிகர்கள் பேசி வருவதாக தமிழ் ரசிகர்கள் பதில் கொடுத்து வருகிறார்கள்.
மணிரத்னம் 'பாகுபலி' படம் போல விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் ஆகியவை இல்லாமல் நிஜமான இடங்களில் 'பொன்னியின் செல்வன்' படத்தை எடுத்து தன்னை ஒரு சிறந்த கிரியேட்டர் என மீண்டும் நிரூபித்துள்ளதாக தமிழ் சினிமா ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
இன்று காலை முதலே பாகுபலி, ராஜமவுலி என டுவிட்டர் டிரெண்டிங்கில் இடம் பெற்று தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மோதல் ஆரம்பமாகியுள்ளது.