‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தமிழ் சினிமாவின் பெருமையாக இன்று வெளிவந்திருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் அமைந்துள்ளதாக காலைக் காட்சிகளைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் சில தெலுங்கு ஊடகங்களும், சில தெலுங்கு ரசிகர்களும் 'பொன்னியின் செல்வன்' படம் பற்றி சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ்வான கமெண்ட்டுகளைப் பரப்பி வருகின்றனர்.
ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' படத்துடன் 'பொன்னியின் செல்வன்' படத்தை ஒப்பிட்டுப் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 'பாகுபலி' படம் ஒரு கற்பனைக் கதை, அதை படமாக்குவதற்கு வசதியாக, எளிதாக எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் படமெடுக்கலாம். ஆனால், 'பொன்னியின் செல்வன்' படத்தின் கதை 70 வருடங்களுக்கு முன்பு கல்கி எழுத்தில் கற்பனையும், உண்மையும் கலந்து எழுதப்பட்ட வரலாற்றுக் கதை. அதை சினிமாவுக்காக எப்படி வேண்டுமானாலும் மாற்றி படமாக்க முடியாது. அந்த வித்தியாசம் கூடத் தெரியாமல் சில தெலுங்கு ரசிகர்கள் பேசி வருவதாக தமிழ் ரசிகர்கள் பதில் கொடுத்து வருகிறார்கள்.
மணிரத்னம் 'பாகுபலி' படம் போல விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் ஆகியவை இல்லாமல் நிஜமான இடங்களில் 'பொன்னியின் செல்வன்' படத்தை எடுத்து தன்னை ஒரு சிறந்த கிரியேட்டர் என மீண்டும் நிரூபித்துள்ளதாக தமிழ் சினிமா ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
இன்று காலை முதலே பாகுபலி, ராஜமவுலி என டுவிட்டர் டிரெண்டிங்கில் இடம் பெற்று தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மோதல் ஆரம்பமாகியுள்ளது.