மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செம்பருத்தி' மற்றும் 'பூவே பூச்சூடவா' தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தன. அந்த தொடர்களில் நடித்த ஷபானாவுக்கும், ரேஷ்மாவுக்கும் ரசிகர்களின் ஆதரவும் பெருகியுள்ளது. ரேஷ்மா தற்போது கலர்ஸ் தமிழின் 'அபி டெய்லர்' தொடரில் நடித்து வருகிறார். 'செம்பருத்தி' தொடர் முடிந்துவிட்ட நிலையில் அடுத்ததாக ஷபானா எந்த பிராஜெக்டில் கமிட்டாக போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
இந்நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இவர்கள் இருவருமே வெள்ளித்திரையில் புதிய படமொன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 'பகையே காத்திரு' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் சின்னத்திரை நடிகைகளான ரேஷ்மாவும், ஷபானாவும் சேர்ந்து நடிக்க உள்ளனர். ஒரே தொலைக்காட்சியில் நடிகைகளாக என்ட்ரி கொடுத்த தோழிகள் இருவரும் தற்போது ஒரே படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுக்க இருப்பதால் ரேஷ்மாவுக்கும், ஷபானாவுக்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
'பகையே காத்திரு' படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். வரலட்சுமி, ஸ்மிருதி வெங்கட் நாயகிகளாக நடிக்கின்றனர். மணிவேல் இயக்க, சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.