புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
தனுஷ் நடித்துள்ள நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. இதையடுத்து சாணிக்காயுதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்க போகிறார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி .பிரகாஷ் இசையமைக்கிறார். பிரியங்கா மோகன், நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அக்டோபர் 7ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்த சந்தீப் கிஷான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது தெலுங்கு மார்க்கெட்டை கருத்தில் கொண்டு இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கேப்டன் மில்லர் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது.