2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா என்கிற படத்தின் முதல் பாகம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரீவள்ளி என்கிற கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. இந்த படம் வெளியான பிறகு இந்த படத்தில் அவர் சாமி சாமி என்கிற பாடலுக்கு ஆடிய நடனம் தெலுங்கில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பலரையும் ஈர்த்து விட்டது. மேலும் பல மாநிலங்களிலிருந்தும் இந்த பாடலுக்கு குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை பலரும் நடனமாடி சோசியல் மீடியாவில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தில் ஸ்ரீவள்ளியாக நடித்த ராஷ்மிகா மந்தனா அணிந்திருந்த சேலை போன்றே தற்போது ஜெய்ப்பூர் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது ஸ்ரீவள்ளி சேலைகள் என்றே அவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வட மாநிலத்தில் ஸ்ரீவள்ளி என்கிற பெயரில் சேலைகள் உருவாகும் அளவுக்கு புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ராஷ்மிகா ஏற்படுத்தி உள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.