ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா என்கிற படத்தின் முதல் பாகம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரீவள்ளி என்கிற கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. இந்த படம் வெளியான பிறகு இந்த படத்தில் அவர் சாமி சாமி என்கிற பாடலுக்கு ஆடிய நடனம் தெலுங்கில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பலரையும் ஈர்த்து விட்டது. மேலும் பல மாநிலங்களிலிருந்தும் இந்த பாடலுக்கு குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை பலரும் நடனமாடி சோசியல் மீடியாவில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தில் ஸ்ரீவள்ளியாக நடித்த ராஷ்மிகா மந்தனா அணிந்திருந்த சேலை போன்றே தற்போது ஜெய்ப்பூர் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது ஸ்ரீவள்ளி சேலைகள் என்றே அவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வட மாநிலத்தில் ஸ்ரீவள்ளி என்கிற பெயரில் சேலைகள் உருவாகும் அளவுக்கு புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ராஷ்மிகா ஏற்படுத்தி உள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.