படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் ஆகிய பிரமாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி தற்போது மகேஷ் பாபு நடிக்க இருக்கும் படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கி இருக்கிறார். ஜங்கிள் ஆக்சன் அட்வெஞ்சராக இந்த படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 2023ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்க உள்ளது. ஆப்பிரிக்க நாட்டின் காடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த நிலையில் தற்போது தனது மகன் கார்த்திகேயாவுடன் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார் ராஜமவுலி. தொலைநோக்கு பார்வையாளர்களில் ஒருவராக இருக்கும் ராஜமவுலி இந்த விழாவில் இந்திய சினிமா மற்றும் டோலிவுட் சினிமா பற்றி விரிவாக பேசுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் ராஜமவுலி, அவரது மகன் கார்த்திகேயா ஆகியோரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.