10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு |
பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் ஆகிய பிரமாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி தற்போது மகேஷ் பாபு நடிக்க இருக்கும் படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கி இருக்கிறார். ஜங்கிள் ஆக்சன் அட்வெஞ்சராக இந்த படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 2023ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்க உள்ளது. ஆப்பிரிக்க நாட்டின் காடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த நிலையில் தற்போது தனது மகன் கார்த்திகேயாவுடன் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார் ராஜமவுலி. தொலைநோக்கு பார்வையாளர்களில் ஒருவராக இருக்கும் ராஜமவுலி இந்த விழாவில் இந்திய சினிமா மற்றும் டோலிவுட் சினிமா பற்றி விரிவாக பேசுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் ராஜமவுலி, அவரது மகன் கார்த்திகேயா ஆகியோரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.