சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி, உருவாகும் படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாகும் இதன் முதல் பாகம் வருகின்ற 30ம் தேதி வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் பெண்களை கவரும் விதமாக தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துள்ள நடிகர்களின் உருவம் பொறிக்கப்பட்ட பட்டு சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளது. பல வண்ணங்களில் தயார் செய்யப்பட்டுள்ள சேலைகளில், த்ரிஷா (குந்தவை), ஐஸ்வர்யா ராய் (நந்தினி) உருவம் பொறிக்கப்பட்ட பார்டருடன், விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, பார்த்திபன், பிரபு ஆகியோரின் உருவமும் இடம்பெற்றுள்ளது. புடவை முழுவதும் போர் வாள் இடம்பெற்றுள்ளது. இது பொன்னியின் செல்வன் படத்திற்கான ப்ரமோஷன் பணியில் ஒரு பகுதிதான் என்றாலும் இது எந்த அளவிற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என்பது பின்னர் தான் தெரியவரும்.




