சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
ஏ.எஸ்.என்டர்டெயின்மென்ட் சார்பில் அலெக்சாண்டர் தயாரிக்கும் புதிய படத்தை வி.பி.நாகேஸ்வரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தொட்டுவிடும் தூரம் என்கிற படத்தை இயக்கியவர். விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு ஹீரோவாக புதுமுகம் நடிக்கிறார்.
டிக்கிலோனா படத்தில் நடித்த ஷெரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார். ஜெய் பீம் தமிழ், வேல ராமமூர்த்தி, மதுசூதனன், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். மாசாணி ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். தென் மாவட்டங்களின் வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை மற்றும் ஆக்ஷன் கலந்த குடும்பப் பாங்கான கதை அம்சத்துடன் இந்த படம் உருவாகிறது.
கன்னடத்தில் அறிமுகமான ஷெரின் கான்ஞ்சனவாலா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் தமிழக்கு வந்தார். அதன்பிறகு சந்தானம் ஜோடியாக டிக்கிலோனா படத்தில் நடித்தார், தற்போது யோகிபாபுவுடன் சூ கீப்பர் படத்தில் நடித்து வருகிறார். இப்போது விக்ராந்த் ஜோடியாக நடிக்கிறார்.