வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
பாலிவுட்டில் கடந்த வருடம் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் '12வது பெயில்'. விது வினோத் சோப்ரா இயக்கிய அந்தப் படத்தில் விக்ராந்த் மாசே கதாநாயகனாக நடித்திருந்தார். ஓடிடி தளத்திலும் பின்னர் வெளியாகி அப்படம் மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்தது.
2013ல் வெளிவந்த 'லூடேரா' படத்தில் அறிமுகமாகி கடந்த 14 வருடங்களாக நடித்து வருகிறார் விக்ராந்த். சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திடீரென அறிவித்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்துதான் கொஞ்சம் வயதானதும் ஓய்வு பெறுவார்கள். அது போல விக்ராந்த் அறிவித்துள்ளது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
“கடந்த சில வருடங்களும் அதற்குப் பின்னும் தனித்தன்மை வாய்ந்தவை. உங்கள் அனைவரவு ஆதரவுக்கும் நன்றி. நான் முன்னோக்கி செல்கிறேன் ஆனாலும் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டி உள்ளது. ஒரு கணவனாக, தந்தையாக, மகனாக மற்றும் ஒரு நடிகராகவும் வீட்டிற்குத் திரும்புவதற்கான நேரத்தை உணர்கிறேன்.
காலம் சரியாக அமைந்தால் 2025ல் கடைசியாக ஒருவரை ஒருவர் நாம் சந்திப்போம். கடந்த இரண்டு படங்கள் மற்றும் பல வருட நினைவுகளுடன் மீண்டும் அனைவருக்கும் நன்றி. எல்லாவற்றுக்கும் என்றென்றும் கடன்பட்டுள்ளேன்” என தனது ஓய்வு குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
70 வயதைக் கடந்த பின்பும், பேரன், பேத்திகள் எடுத்த பின்பும் இந்திய சினிமாவில் பலர் இன்னும் நடித்து வருகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் விக்ராந்த் மாசே தனது 37வது வயதில் ஓய்வு அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று.