அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகில் 80களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சரிதா. அந்த கால கட்டத்திலேயே மற்ற நடிகைகளைப் போல அல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்கள் பலவற்றில் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர். இந்தக் கால ரசிகர்கள் இவர் யார் என்று கேட்டால், 'பிரண்ட்ஸ்' படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்தவர் என்று சொன்னால் தெரிந்துவிடும்.
கடந்த 35 வருடங்களில் தமிழில் நான்கைந்து படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். கடைசியாக 2006ல் வெளிவந்த 'ஜுன் ஆர்' படத்தில் நடித்தார். 2013ல் வெளிவந்த 'சிலோன்' என்ற படத்திலும் நடித்திருந்தார். திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட அந்தப் படம் இங்கு தியேட்டர்களில் வந்து போன சுவடு தெரியாமல் போனது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது 'மாவீரன்' படததில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சரிதா. இது பற்றிய அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆரம்பமாகி உள்ளது.