'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
2012ல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் காயத்ரி. நல்ல நடிப்பு திறமை இருந்தாலும் அதன்பின் பெரிய அளவில் இவருக்கு படங்கள் வரவில்லை. அதேசமயம் விஜய் சேதுபதியின் ஆஸ்தான நடிகையாக தொடர்ந்து அவரது படங்களில் தவறாமல் இடம்பெற்று வந்தார் காயத்ரி. குறிப்பாக இந்த பத்து வருடங்களில் விஜய்சேதுபதியுடன் இணைந்து கிட்டத்தட்ட எட்டு படங்களில் நடித்துள்ளார் காயத்ரி.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான விக்ரம் மற்றும் மாமனிதன் ஆகிய படங்களில் சோலோ கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மீண்டும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் காயத்ரி. இதைத்தொடர்ந்து தற்போது மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் ஜோடியாக நடித்து வரும் நின்ன தான் கேஸ் கொடு என்கிற படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அந்த வகையில் தான் நடித்த படங்கள் மாதத்திற்கு ஒன்றாக வெளியாகி வருவதில் உற்சாகமாகி இருக்கிறாராம் காயத்ரி. இந்த வாய்ப்பை கெட்டியாக பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவாரா காயத்ரி என்பது போகப் போகத்தான் தெரியும்