ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
சமீப மாதங்களில் தெலுங்கில் வெளியான புஷ்பா படத்தில் வித்தியாசமான வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரி வேடத்திலும், கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் சீக்ரெட் ஏஜென்ட் கதாபாத்திரத்திலும் நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று விட்டார் மலையாள நடிகர் பஹத் பாசில்.
இந்த நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் நடித்துள்ள மலையான் குஞ்சு என்கிற திரைப்படம் வரும் ஜூலை 22ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் பஹத் பாசில். அப்படி ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தனுஷுக்காக எழுதப்பட்ட கதாபாத்திரத்தில் தான் நடித்ததாக கூறியுள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் கும்பலாங்கி நைட்ஸ் என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் நான்கு குணசித்திர நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, வில்லனாக சைக்கோத்தனம் கலந்த ஷம்மி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பஹத் பாசில். ஊருக்குள் பார்ப்பதற்கு நல்ல மனிதனாக காட்சியளிக்கும் அவர். குடும்பத்திலும் தனக்கு பிடிக்காதவர்களிடமும் சைக்கோத்தனமாக நடந்து கொள்ளும் காட்சிகளில் ரசிகர்களே எதிர்பாராத வகையில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் இந்த கதாபாத்திரம் முதலில் தனுஷை மனதில் வைத்து தான் எழுதப்பட்டதாகவும், பின்னர் பட்ஜெட், கால்ஷீட் உள்ளிட்ட சில பிரச்சனைகளால் அவரை இந்த படத்திற்குள் அழைத்து வர முடியவில்லை என்பதால் இறுதியாக தானே நடித்ததாகவும் கூறியுள்ளார் பஹத் பாசில். இந்த படத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருந்து பஹத் பாசில் இந்தப்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.