48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி | சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு |
கல்கி எழுதிய சரித்திர நாவலான 'பொன்னியின் செல்வன்' தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி உள்ளது. இன்று இப்படத்தின் டீசர் ஐந்து மொழிகளில் வெளியாவதை முன்னிட்டு கடந்த சில நாட்களாக படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த அறிமுகப் போஸ்டர்களில் சில எழுத்துப் பிழைகள் உள்ளது 'பொன்னியின் செல்வன்' நாவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மணிரத்னம் போன்ற முன்னணி இயக்குனர்கள் இயக்கும் ஒரு படத்தில் இப்படி ஒரு தவறு நிகழலாமா என்று பலரும் சமூக வலைத்தளங்களில் குறைபட்டு வருகிறார்கள்.
முதலில் வெளியான விக்ரம் போஸ்டரில் 'ஆதித்த கரிகாலன்' என்பதற்குப் பதிலாக 'ஆதித்ய கரிகாலன்' என்று இருந்தது. இன்று வெளியான ஜெயம் ரவி போஸ்டரில் 'அருள்மொழி வர்மன்' என்பதற்குப் பதிலாக 'அருண்மொழி வர்மன்' என இருக்கிறது.
மணிரத்னத்திடம் தமிழ் தெரிந்த உதவி இயக்குனர்கள் இல்லையா, அல்லது பொன்னியின் செல்வன் நாவலை முழுவதுமாகப் படித்த உதவி இயக்குனர்கள் இல்லையா என்பது தெரியவில்லை. மக்கள் மனதில் ஆழப் பதிந்த ஒரு நாவலைப் படமாக்கி அது பற்றிய அறிமுகங்களை வெளியிடும் போது தவறுகளைப் பார்ப்பது இயக்குனரின் வேலைதானே என்று வருத்தப்படுகிறார்கள் ரசிகர்கள். போஸ்டர்களிலேயே இப்படி தவறு என்றால் படத்தில் என்ன செய்திருப்பார்கள் என்றும் கேட்கிறார்கள்.