கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
கல்கி எழுதிய சரித்திர நாவலான 'பொன்னியின் செல்வன்' தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி உள்ளது. இன்று இப்படத்தின் டீசர் ஐந்து மொழிகளில் வெளியாவதை முன்னிட்டு கடந்த சில நாட்களாக படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த அறிமுகப் போஸ்டர்களில் சில எழுத்துப் பிழைகள் உள்ளது 'பொன்னியின் செல்வன்' நாவல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மணிரத்னம் போன்ற முன்னணி இயக்குனர்கள் இயக்கும் ஒரு படத்தில் இப்படி ஒரு தவறு நிகழலாமா என்று பலரும் சமூக வலைத்தளங்களில் குறைபட்டு வருகிறார்கள்.
முதலில் வெளியான விக்ரம் போஸ்டரில் 'ஆதித்த கரிகாலன்' என்பதற்குப் பதிலாக 'ஆதித்ய கரிகாலன்' என்று இருந்தது. இன்று வெளியான ஜெயம் ரவி போஸ்டரில் 'அருள்மொழி வர்மன்' என்பதற்குப் பதிலாக 'அருண்மொழி வர்மன்' என இருக்கிறது.
மணிரத்னத்திடம் தமிழ் தெரிந்த உதவி இயக்குனர்கள் இல்லையா, அல்லது பொன்னியின் செல்வன் நாவலை முழுவதுமாகப் படித்த உதவி இயக்குனர்கள் இல்லையா என்பது தெரியவில்லை. மக்கள் மனதில் ஆழப் பதிந்த ஒரு நாவலைப் படமாக்கி அது பற்றிய அறிமுகங்களை வெளியிடும் போது தவறுகளைப் பார்ப்பது இயக்குனரின் வேலைதானே என்று வருத்தப்படுகிறார்கள் ரசிகர்கள். போஸ்டர்களிலேயே இப்படி தவறு என்றால் படத்தில் என்ன செய்திருப்பார்கள் என்றும் கேட்கிறார்கள்.