காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் சுழல் வெப் தொடர் மற்றும் தியேட்டர்களில் வெளியாகி உள்ள ராக்கெட்ரி படத்தில் சாம் சி.எஸ்சின் பின்னணி இசை குறித்து பரவலாக பேசப்படுகிறது.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் பல ஹிட் பாடல்கள் கொடுத்திருந்தாலும் பின்னணி இசை பற்றி பேசப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு அமைகிற படம் எல்லமே கொலை, கொள்ளை நிறைந்த டார்க் ஜானர் படங்களாக இருக்கிறது. அவற்றில் பாடல்களை விட பின்னணி இசைக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும்.
ஆனால் பாடலின் வெற்றியின் மூலமே ஒரு இசை அமைப்பாளர் கவனிக்கப்படுகிறார், கொண்டாடப்படுகிறார் என்பதுதான் இன்றையநிலை. அந்த வகையில் எனக்கு வருத்தம் உண்டு. இப்போதுள்ள நவீன டெக்னாலஜியை கொண்டு ஒரு உருப்படாத பாடலை கூட 50 லட்சம் வரை செலவு செய்து செயற்கையாக ஹிட்டாக்கி விட முடியும். அதை செய்ய நான் தயாராக இல்லை. பாடலுக்கான வாய்ப்புகள் வரும்போது நானும் கொண்டாடப்படுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்கிறார் சாம் சி.எஸ்.