சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

தமிழின் முன்னணி நடிகையான நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இந்த புதுமண ஜோடி தாய்லந்து சென்று தங்களது ஹனிமூனைக் கொண்டாடி பின்னர் இந்தியா திரும்பியது.
இந்தியா வந்ததுமே நயன்தாரா மும்பைக்குச் சென்றுவிட்டாராம். இன்று முதல் ஷாரூக்கான் நடிக்கும் 'ஜவான்' படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 20 நாட்களுக்கு மும்பையில் தங்கியிருந்து தனது படப்பிடிப்பை முடித்துக் கொடுக்கப் போகிறாராம்.
அதன்பின் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படத்தின் பாடல் காட்சிகளில் நடிக்க கலந்து கொள்வாராம். நயன்தாராவின் அபிமான இயக்குனராக அட்லீ இயக்கும் இந்தப் படம் மூலம் நயன்தாரா ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார்.
பொதுவாக பாலிவுட்டில் மிகவும் இளம் வயதில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்வார்கள். ஆனால், நயன்தாரா திருமணத்திற்குப் பிறகே பாலிவுட்டில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.