‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. அந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் ரயில் எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆளும் பாஜ, அக்னிபத் திட்டம் குறித்து இளைஞர்களுக்கு விளக்கம் அளித்து அவர்களை அமைதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் பேரரசு அக்னிபத் போராட்டம் குறித்து ஒரு கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், அக்னிபத் திட்டம் அனைவருக்கும் பொதுவான ஒன்று. இந்த திட்டத்திற்கு போராட்டங்கள் வெடித்திருப்பதை வைத்து பார்க்கும்போது தேச துரோகிகள் அடையாளம் காட்டப்பட்டு விட்டார்கள். இவர்களை பின்னால் இருந்து யாரோ இருக்கிறார்கள். இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் எப்படி நாளை நாட்டை காப்பாற்றுவார்கள். பொதுச்சொத்தை சேதப்படுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் தேச துரோகிகள் தான் என்றார்.