3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா |
தமிழ் சினிமாவின் அஷ்டவதானி என்று அழைக்கப்படுகிறவர் டி.ராஜேந்தர். ஒரு காலத்தில் தொடர்ச்சியாக வெள்ளி விழா படங்களை கொடுத்தவர். அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் டி.ராஜேந்தருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரது வயிற்று பகுதியில் ஏற்படும் ரத்தகசிவு பிரச்சினைக்காக வெளிநாட்டுக்கு சிகிக்சைக்கு செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பே அவரது மகன் சிம்பு அமெரிக்கா சென்று தந்தையின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கி விட்டார். திட்டமிட்டபடி. நேற்று அவரது அமெரிக்கா புறப்பட்டு சென்றார் டி.ராஜேந்தர். அவருடன் மனைவி உஷா உடன் சென்றார். முன்னதாக அவர் விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இப்போது நான் உயர் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்கிறேன். நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தவன் கிடையாது. அதற்குள் அமெரிக்கா சென்றுவிட்டேன் என பல கதைகளை எழுதி விட்டனர். யார் என்ன எழுதினாலும் விதியை மீறி எதுவும் நடக்காது. முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை சந்தித்து ஆறுதல் கூறி அன்பை காட்டி பாசம் காட்டி தோள் தட்டி நம்பிக்கை ஊட்டியதை மறக்க முடியாது.
என்னை பற்றி எந்த வதந்திகள் வந்தாலும் நம்ப வேண்டாம். நான் மேல் சிகிச்சைக்காக சென்று மீண்டும் உங்களை வந்து சந்திப்பேன். நான் வெளிநாடு சென்று மருத்துவம் பார்ப்பதற்கான காரணம் எனது மகன் சிலம்பரசன் தான். அவன் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் நான் ஒப்புக்கொண்டேன். அவனது படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு தாய், தந்தைக்காக 12 நாட்களாக அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து வருகிறான். என் மகனை நான் மன்மதனாக மட்டும் வளர்க்கவில்லை. மரியாதை தெரிந்தவனாகவும் வளர்த்துள்ளேன். சிம்பு படத்தில் வல்லவன் நிஜத்தில் நல்லவன். பெற்றவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் என் மகன் பெற்றோர்களுக்காக கடின உழைப்பு செய்து வருகிறார். இப்படி ஒரு மகனை பெற்றதற்கும், குருவாக இருந்து ஒரு நல்ல சிஷ்யனை உருவாக்கியதற்கும் நான் பெருமைப்படுகிறேன். பாக்கியமாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கமல் நலம் விசாரிப்பு
முன்னதாக டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக அவரை நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் சந்தித்து பேசினார். அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.