'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
வெற்றிச் செல்வன், அழகுராஜா, கபாலி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. தற்போது ஹிந்தியில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். மற்ற நடிகைகள் போன்று கமர்ஷியல் நாயகியாக அல்லாமல் தேர்ந்தெடுத்த படங்களில், போல்டான வேடங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில் சினிமாவில் தான் அறிமுகமான புதிதில் தான் சந்தித்த விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛சினிமாவுக்கு நான் அறிமுகமான புதிதில் பலர் உடலில் சர்ஜரி செய்யும்படி கூறினார்கள். அதாவது மூக்கு, மார்பகம், கன்னம், கால்கள், தொடை ஆகியவற்றை சர்ஜரி செய்து இன்னும் அழகாக மாற்றும்படி கூறினர். சிலர் தலைமுடியில் வண்ணம் தீட்ட சொன்னார்கள். இவர்கள் கூறியதை கேட்டு எனக்கு கோபம் தான் வந்தது. ஆனாலும் அதன்பிறகு எனது உடலை இன்னும் அதிகமாக நேசிக்க தொடங்கினேன்'' என்றார் ராதிகா ஆப்தே.