துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் மணிகண்டன், சூர்யா , ரஜிஷா விஜயன்,பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ்,லிஜோ மோல் ஜோ நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு பின் பார்வதி அம்மாளின் கதை பலருக்கு தெரிய வந்தது. இதையடுத்து சென்னை முகலிவாக்கத்தில் மகள் வீட்டில் வசித்து வந்த பார்வதி அம்மாவை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ் அவருக்கு ஒரு லட்சம் வழங்கி அவருக்கு வீடு கட்டிக்கொடுக்க இருப்பதாக தெரிவித்தார். பிறகு தமிழக அரசே பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டி தர இருப்பதாக அறிவித்தது.
பின்னர் பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தருவதற்காக தான் ஒதுக்கிய 5 லட்சத்துடன் மேலும் 3 லட்சம் சேர்த்து, பார்வதி அம்மாள், அவருடைய மகள், மற்றும் அவருடைய இரண்டு மகன்கள் ஆகியோருக்கு தலா இரண்டு லட்சங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக ராகவா லாரன்ஸ் அறிவித்து இருந்தார் .
இந்நிலையில் பார்வதி அம்மாளின் குடும்பத்தினரை தனது அலுவலகத்துக்கு அழைத்து வீடு கட்டித்தருவதற்காக ஒதுக்கிய தொகையை பார்வதி அம்மா , மற்றும் அவருடைய மகன் மகள்களுக்கு பிரித்து வழங்கியுள்ளார் .