இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
தமிழில் உதயம், மாஸ் என்ற மாசிலாமணி, சகுனி என பல படங்களில் நடித்தவர் கன்னட நடிகை பிரணிதா. இவர் கடந்த ஆண்டு மே மாதம் பிரஜித் என்று தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து கர்ப்பமான பிறகு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சி குறித்த படங்களையும் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது பிரணிதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிரணிதா வெளியிட்டுள்ள பதிவில், ‛‛உண்மையிலேயே நான் ஒரு அதிர்ஷ்டசாலி. மகப்பேறு மருத்துவர் டாக்டர் ஜெயஸ்ரீ கடினமான நேரங்களாக இருந்தாலும் அதிர்ஷ்டவசமாக அவரது குழுவில் உள்ள டாக்டர் சுனில் உதவிடன் சீராக பிரசவம் நடைபெற்றது. என்னுடைய பிரசவ வலியை குறைப்பதற்காக முயற்சி எடுத்த டாக்டர் சுபா மற்றும் மயக்க மருந்து நிபுணர் உள்பட மருத்துவக்குழு அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என்னுடைய குழந்தையின் முகத்தை உங்களிடம் காட்டுவதற்கு விருப்பமாக இருக்கிறேன் என்றும் பதிவிட்டுள்ள பிரணிதா, மருத்துவமனையில் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.