புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கடந்த 2019ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது. இதில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் ஓட்டுப்பதிவு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதில் விஷால் பாண்டவர் அணி வெற்றி பெற்றனர். நாசர் தலைவராகவும், விஷால் செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசியுள்ளனர். நடிகர் சங்க கட்டடம் மற்றும் பல்வேறு விஷயங்களை அவருடன் பேசியுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.