இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
சினிமா மீதும் தங்களது அபிமான நடிகர்கள் மீதும் தீவிரமான பிரியம் கொண்ட ஒரு சில ரசிகர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்துவற்தாகவும் தங்களது அபிமான ஹீரோக்களை சந்திப்பதற்காகவும் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடுவது உண்டு. அப்படி ஆந்திராவைச் சேர்ந்த ஒரு ரசிகர் தனது அபிமான நடிகரான ராம்சரணை சந்திப்பதற்காக தனது ஊரிலிருந்து 264 கிலோமீட்டர்கள் நடந்தே வந்து ராம்சரனை சந்தித்துள்ளார் நான்கு நாட்களில் நடைபயணமாக இந்த தூரத்தை அவர் கடந்து வந்துள்ளார்.
அதேசமயம் அவர் இதைவிட இன்னொரு மாபெரும் விஷயத்தையும் செய்திருக்கிறார். தன்னுடைய சொந்த வயலில் நெல் நாற்று நடும் சமயத்தில் கிட்டத்தட்ட மிகப்பெரிய பரப்பளவில் நெல் நாற்றுக்கள் மூலமாகவே ராம்சரணின் உருவத்தை வரைந்து அதையும் புகைப்படமாக எடுத்து கொண்டு வந்து ராம்சரணுக்கு பரிசளித்துள்ளார். மேலும் தனது வயலில் விளைந்த இரண்டு மூட்டை நெல்லையும் ராம்சரணுக்கு அளித்து அவரை நெகிழ வைத்துள்ளார் இந்த அதி தீவிர ரசிகர்.
இப்படி ஒரு ரசிகர் தன்னை சந்திக்க வருவதை கேள்விப்பட்டு அவருக்காக நேரம் ஒதுக்கி அவருடைய அவர் தனக்காக செய்துள்ள விஷயங்களை பார்த்து பிரமித்துப் போய்விட்டார் ராம்சரண். தனது ரசிகருடன் ராம்சரண் நடத்திய சந்திப்பு குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.