ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி |

மதுரை ரசிகர்கள் திடீர் திடீரென ஒட்டும் போஸ்டர்கள் பரபரப்பை கிளப்பும். ஆனால் கமல் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் அவர்களை தற்போது காவல் நிலையம் வரைக்கும் கொண்டு சென்றிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடித்துள்ள விக்ரம் படம் வருகிற ஜூன் 3ம் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் படம் வெளிவருவதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து நாடு முழுவதும் கமலின் சினிமாவை வரவேற்று போஸ்டர் ஒட்டி வருகிறார்கள்.
படத்தின் டிரைலரில் கமல் ஒரு ஆபாச வசனத்தை மறைமுகமாக பேசி இருப்பார். கமல் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இப்படி பேசலாமா என்கிற ஒரு விமர்சனம் நிலவி வரும் நேரத்தில் கமல் ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள் மதுரையில் அந்த ஆபாச வசனத்துடன் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மதுரை மண்டல மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகளான கதிரேசன் மற்றும் வினோத் சேது ஆகியோரிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.