மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மதுரை ரசிகர்கள் திடீர் திடீரென ஒட்டும் போஸ்டர்கள் பரபரப்பை கிளப்பும். ஆனால் கமல் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் அவர்களை தற்போது காவல் நிலையம் வரைக்கும் கொண்டு சென்றிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடித்துள்ள விக்ரம் படம் வருகிற ஜூன் 3ம் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் படம் வெளிவருவதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து நாடு முழுவதும் கமலின் சினிமாவை வரவேற்று போஸ்டர் ஒட்டி வருகிறார்கள்.
படத்தின் டிரைலரில் கமல் ஒரு ஆபாச வசனத்தை மறைமுகமாக பேசி இருப்பார். கமல் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இப்படி பேசலாமா என்கிற ஒரு விமர்சனம் நிலவி வரும் நேரத்தில் கமல் ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள் மதுரையில் அந்த ஆபாச வசனத்துடன் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மதுரை மண்டல மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகளான கதிரேசன் மற்றும் வினோத் சேது ஆகியோரிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.