இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
ஈஸ்வரன் படத்தையடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் வெற்றி பெற்றதையடுத்து தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் பல சீரியல்களில் நடித்து வரும் ஸ்ரீநிதி விஜய் என்ற நடிகை சில மாதங்கள் முன்பு சோசியல் மீடியாவில், எல்லோருக்கும் திருமணம் ஆகியிருக்கும். ஆனால் நானும் சிம்புவும் மட்டும் சிங்கிள் ஆகவே இருப்போம் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ரசிகர்கள் பல கமெண்டுகளை கொடுத்து வந்தார்கள்.
இந்த நிலையில் சிம்புவின் வீட்டின் முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நடிகை ஸ்ரீநிதி விஜய் தர்ணா செய்திருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ள ஸ்ரீ நிதி விஜய், இத்தனை ஆண்டுகள் எனக்காக தான் நீங்கள் சிங்கிளாக இருந்தீர்கள் என்பதை நம்பவே முடியவில்லை. இன்னைக்கு தான் எனக்கு புரிந்தது. எல்லோரும் சிம்புவையும் என்னையும் சேர்த்து வையுங்கள் ப்ளீஸ் என்று ஸ்ரீநிதி விஜய் பதிவிட்டுள்ளார். உண்மையிலேயே சிம்புவை இவர் காதலிக்கிறாரா? இல்லை ஒரு பப்ளிசிட்டிக்காக இப்படி செய்து கொண்டிருக்கிறாரா? என்பது தெரியவில்லை.