கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
அச்சுமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னர் காதலாகி கடந்த 2012ல் திருமணமும் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதியர் நேற்று தங்களது 10வது திருமண நாளை கொண்டாடினர்.
பிரசன்னா உடன் இருக்கும் ரொமான்ஸ் போட்டோவை பதிவிட்டு சினேகா கூறுகையில், ‛‛எங்களின் 10 ஆண்டு பயணம் எளிதல்ல. நிறைய சண்டை, கருத்துவேறுபாடு இருந்தது. நான் கொடுத்த வாக்குறுதிகள் சிலவற்றை மீறினேன். உங்கள்(பிரசன்னா) இதயத்தையும் சமயங்களில் உடைத்தேன். ஆனால் எப்போதும் என்னிடம் நீங்கள் அன்பு காட்டுகிறீர்கள். உங்கள் அன்பால் என்னை மீண்டும் மீண்டும் வெல்கிறீர்கள். அன்பை விட தூய்மையானது இந்த உலகில் இல்லை. லவ் யூ கண்ணம்மா'' என்கிறார்.