பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 66வது படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தில் தமிழ் நடிகர்களான சரத்குமார், பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர பிரகாஷ் ராஜ், ஜெயசுதாவும் நடிக்கின்றனர். நேற்று இப்படத்தில் நடிக்கும் மற்ற சில நடிகர்களைப் பற்றிய அப்டேட்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்தது படக்குழு.
நகைச்சுவை நடிகர் யோகிபாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், தமிழ் நடிகை சங்கீதா, பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோரும் இப்படத்தில் இணைவதாக நேற்று அறிவித்தனர். நேற்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் தமிழ் நடிகர் ஷாம் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு குடும்பக் கதையாக உருவாகிறது. படத்தைத் தமிழில் தயாரித்தாலும் எப்படியும் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடுவார்கள். எனவே, இரு மொழிகளிலும் அறிந்த நடிகர்கள், நடிகைகளை படத்தில் நடிக்க வைப்பதாகத் தெரிகிறது.