காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தானா மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 66வது படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படத்தில் தமிழ் நடிகர்களான சரத்குமார், பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர பிரகாஷ் ராஜ், ஜெயசுதாவும் நடிக்கின்றனர். நேற்று இப்படத்தில் நடிக்கும் மற்ற சில நடிகர்களைப் பற்றிய அப்டேட்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்தது படக்குழு.
நகைச்சுவை நடிகர் யோகிபாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், தமிழ் நடிகை சங்கீதா, பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோரும் இப்படத்தில் இணைவதாக நேற்று அறிவித்தனர். நேற்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் தமிழ் நடிகர் ஷாம் கலந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு குடும்பக் கதையாக உருவாகிறது. படத்தைத் தமிழில் தயாரித்தாலும் எப்படியும் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடுவார்கள். எனவே, இரு மொழிகளிலும் அறிந்த நடிகர்கள், நடிகைகளை படத்தில் நடிக்க வைப்பதாகத் தெரிகிறது.