கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
மாநாடு படத்தை அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு. இதையடுத்து முப்தி என்ற கன்னட படத்தின் ரீமேக்கான பத்து தல படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கிறார் சிம்பு. இப்படத்தில் சிம்பு கேங்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார்கள். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் அடுத்த கட்ட படப்பிடிப்பு மே 27ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ச்சியாக ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏ ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார்.