ரயில் பைட், ஆட்டமா தேரோட்டமா... : ‛கேப்டன் பிரபாகரன்' மலரும் நினைவில் ஆர்.கே.செல்வமணி | 'கூலி' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் ரத்தாகுமா ? | 'கேப்டன் பிரபாகரன்' காட்சியைக் காப்பியடித்த 'புஷ்பா 2' | ரஜினி, கமல் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் சாத்தியமா... : கோலிவுட் தகவல் என்ன...? | 35 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் மம்முட்டியின் ‛சாம்ராஜ்யம்' | ஷாஜி கைலாஷ் டைரக்சனில் பழிவாங்கும் கதையில் நடிக்கும் ஜோஜூ ஜார்ஜ் | 6 கோடியில் எடுத்து 100 கோடி வசூல் செய்த கன்னட படம் ; காந்தாராவுக்கு பின் அடுத்த சாதனை | ஆஸ்கர் புகழ் நாட்டு நாட்டு பாடகருக்கு திருமண நிச்சயதார்த்தம் | நடிகர் விஷ்ணுவர்தனின் புதிய நினைவிடத்திற்காக இலவசமாக நிலம் வழங்கிய கிச்சா சுதீப் | வார் 2 : 300 கோடி வசூலித்ததாக அறிவிப்பு |
இயக்குனராக பல வெற்றிப் படங்களை கொடுத்த செல்வராகவன், தற்போது நடிகராகவும், அவரது திரைப் பயணத்தை விரிவுபடுத்தி உள்ளார். 'பீஸ்ட்' படத்தை அடுத்து, அவர் நடித்துள்ள 'சாணிக்காயிதம்' படம் ஓ.டி.டி.,யில் வெளியாகி உள்ளது. அவர் நம் நாளிதழுக்கு அவர் அளித்த மினிபேட்டி: 'சாணிக்காயிதம்' கதை ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. ஏன், நாம நடிக்கக்கூடாதுனு நினைச்சேன். 'சாணிக்காயிதம்' டீமை, வெறிப்பிடிச்ச 'டீம்!' வேலையை தவிர எதுவும் யோசிக்காம, ஓடிட்டே இருந்தாங்க; எனக்கு நல்ல அனுபவமா இருந்துச்சு.
நடிக்க போகும்போது, இயக்குனர் செல்வராகவனை மூட்டை கட்டி வைச்சுட்டு, நடிகரா மட்டுமே போனேன். நிறைய விஷயம் கத்துக்கிட்டேன்; இன்னும் நிறைய கத்துக்கணும். 'செட்'டுல, கீர்த்தியின் நடிப்பை நிறைய முறை வேடிக்கை பார்த்தேன். திறமையான நடிகை. கதை அமைஞ்சால், தனுஷுடன் இணைந்து நடிப்பேன். மீண்டும், '7 ஜி ரெயின்போ காலனி' மாதிரியான படங்களை இயக்கலாம்.
'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு முடிஞ்சு, இறுதி கட்ட வேலை நடந்துட்டு இருக்கு. எதிர்கால திட்டம் எல்லாருக்கும் இருக்கும். சினிமாவில் பக்குவம் வரும்போது, இன்றைய நாளை தவிர பெரிய சிந்தனை எல்லாம் இருக்காது. இப்ப செய்ற வேலையை சரியாக செஞ்சா போதும்னு நினைக்கிறேன். என் படத்திலேயே 'ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை' இரண்டாம் பாகங்களை எடுக்கலாம். அதுக்கான களம், நேரம் அமையணும் என்றார்.