இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள படம் 'இரவின் நிழல்'. உலகின் புது முயற்சியாக இந்த படம் ஒரே ஷாட்டில் லான் லீனியர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் இப்பட விழாவில் நடிகர் ரோபோ சங்கர் மீது பார்த்திபன் மைக்கை வீசி எறிந்த சம்பம் சர்ச்சையானது. இதற்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்தார். ரோபோ சங்கரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தன் தரப்பு விளக்கத்தையும் கொடுத்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தை முத்தம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பார்த்திபன்.
இதுபற்றி பார்த்திபன் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் மைக் உடன் ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுத்துள்ளார் பார்த்திபன். அதன் உடன், ‛‛மைக்கை கண்டுபிடித்தவர் எமிலி பெர்லினர். மைக்கை கேட்ச் பிடிக்காமல் விட்டர் ரோபோ சங்கர். மைக்கால் பிடிபட்டவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். முடிவில் முத்தமிட்டவர்'' என பதிவிட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.