நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
பார்த்திபன் இயக்கி, நடித்துள்ள படம் 'இரவின் நிழல்'. உலகின் புது முயற்சியாக இந்த படம் ஒரே ஷாட்டில் லான் லீனியர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் இப்பட விழாவில் நடிகர் ரோபோ சங்கர் மீது பார்த்திபன் மைக்கை வீசி எறிந்த சம்பம் சர்ச்சையானது. இதற்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்தார். ரோபோ சங்கரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தன் தரப்பு விளக்கத்தையும் கொடுத்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தை முத்தம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பார்த்திபன்.
இதுபற்றி பார்த்திபன் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் மைக் உடன் ரோபோ சங்கருக்கு முத்தம் கொடுத்துள்ளார் பார்த்திபன். அதன் உடன், ‛‛மைக்கை கண்டுபிடித்தவர் எமிலி பெர்லினர். மைக்கை கேட்ச் பிடிக்காமல் விட்டர் ரோபோ சங்கர். மைக்கால் பிடிபட்டவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். முடிவில் முத்தமிட்டவர்'' என பதிவிட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.