காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

பார்த்திபன் 'குடைக்குள் மழை' என்ற ஒரு படத்தை ஆரம்பித்தார். அந்தப் படத்திற்கு அழகான ஹீரோயின் ஒருவர் வேண்டும் என்று கேரளா சென்று ஆடிசன் நடத்தி தேர்வு செய்த நடிகை டயானா மரியம் குரியன்.
ஆனால் பார்த்திபன் படத்தை தொடங்க தாமதமாக, மரியாவும் வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். மரியமை சந்திக்க பார்த்திபன் நேரில் வரச் சொன்னார். ஆனால் அவர் மறுத்து, "நான் வேறொரு படத்தில் நடித்து வருகிறேன். அதை முடித்துவிட்டு வருகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
இதனால் கோபம் அடைந்த பார்த்திபன் உடனடியாக மதுமிதா என்ற தெலுங்கு நடிகையை வைத்து படத்தை ஆரம்பித்து விட்டார். அந்த மரியாதான் நயன்தாரா. பின்நாளில் நயன்தாராவை சந்தித்த பார்த்திபன் : "அன்று நீங்கள் என் படத்தில் நடித்திருந்தால் நானும் உங்களை வைத்து வேறு சில படங்களை இயக்கியிருப்பேன். ஆனால் நீங்கள் இந்த உயரத்தை தொட்டிருக்க முடியாது" என்றார்.




