52வது பிறந்தநாளில் மனைவி ஷோபாவுக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்த இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர்! | கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் நானி! | 25வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய அஜித்குமார் - ஷாலினி! | பிளாஷ்பேக் : திமுகவுக்காக தலைப்பை மாற்றியதால் தன் பட தலைப்பை கொடுத்த எம்ஜிஆர் | பஹல்காம் தாக்குதலை திசை திருப்பாதீர்கள்: ஆண்ட்ரியா வேண்டுகோள் | திரைப்படக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய 'கீனோ' | பிளாஷ்பேக் : தியாகராஜ பாகவதரை காப்பாற்ற முயன்ற திரையுலகம் | முழுக்க முழுக்க 'ஏஐ' மூலம் உருவான இந்தியாவின் முதல் படம்: பட்ஜெட் 10 லட்சம் தானாம்! | பிரியா பிரகாஷ் வாரியரை டென்ஷனாக்கிய விஜய்யின் பாராட்டு வீடியோ | நான் பாகிஸ்தானி அல்ல ; கொதிக்கும் பிரபாஸ் பட நாயகி |
திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக பிரபல இயக்குனர் சணல் குமார் சசிதரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில், பிரபல நடிகர் திலீப், பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அவருடைய முன்னாள் மனைவியான பிரபல நடிகை மஞ்சு வாரியரிடமும் இது தொடர்பாக விசாரணை நடந்துள்ளது.
இந்நிலையில் பிரபல இயக்குனர் சணல் குமார் சசிதரன் கூறியுள்ளதாவது: நடிகை மஞ்சு வாரியரை கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே பதிவிட்டிருந்தேன். மஞ்சு வாரியரின் மேலாளர்கள் சிலரின் பெயரையும் நான் குறிப்பிட்டிருந்தேன். என்னுடைய பதிவுகளுக்கு மஞ்சு வாரியர் பதில் அளிக்கவில்லை. அதனால், என்னுடைய சந்தேகம் அதிகரித்துள்ளது. யாரோ சிலரின் கட்டுப்பாட்டில் மஞ்சு வாரியர் இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.