பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக பிரபல இயக்குனர் சணல் குமார் சசிதரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில், பிரபல நடிகர் திலீப், பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அவருடைய முன்னாள் மனைவியான பிரபல நடிகை மஞ்சு வாரியரிடமும் இது தொடர்பாக விசாரணை நடந்துள்ளது.
இந்நிலையில் பிரபல இயக்குனர் சணல் குமார் சசிதரன் கூறியுள்ளதாவது: நடிகை மஞ்சு வாரியரை கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே பதிவிட்டிருந்தேன். மஞ்சு வாரியரின் மேலாளர்கள் சிலரின் பெயரையும் நான் குறிப்பிட்டிருந்தேன். என்னுடைய பதிவுகளுக்கு மஞ்சு வாரியர் பதில் அளிக்கவில்லை. அதனால், என்னுடைய சந்தேகம் அதிகரித்துள்ளது. யாரோ சிலரின் கட்டுப்பாட்டில் மஞ்சு வாரியர் இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.